Categories
மாநில செய்திகள்

“பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான புகார்கள் இல்லை”… ஆய்வுக்குப் பின் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி…!!!!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விதிகள் இல்லங்கள் பற்றியும் 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் இன்று சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை தனியார் பள்ளியில் மதமாற்றம் நடைபெற்றதற்கான எந்தவிதமான புகார்களும் இல்லை என பள்ளியில் ஆய்வுக்குப் பின் மாநில சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். மேலும் உள்நோக்கத்துடன் மாநில குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |