Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் சிறுமி மீது விழுந்த இரும்பு கேட்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்…..!!!!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்ற டிசம்பர் 20ஆம் தேதி ராம்புரா கிராமத்திலுள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஒரு கனமான இரும்பு கேட் அருகில் அஷ்மிதா மொஹானியா என்ற 8 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது கேட் அறுந்ததில் இரும்பு கதவானது சிறுமி மீது விழுந்தது.

இதன் காரணமாக சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதன்பின் சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் உடனே இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மயூர் பரேக் கூறினார். இச்சம்பவம் பற்றி தாஹோத் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் விபத்து மரணம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Categories

Tech |