பள்ளி மாணவரை தாக்கிய சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளம் கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சஞ்சய் ஆயன்குளம் பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். அப்போது திடீரென இரண்டு சிறுவர்கள் அங்கு சென்று சஞ்சயை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் சஞ்சயும் அவரது நண்பர்களும் அங்கிருந்து ஓடினர்.
ஆனால் அந்த சிறுவர்கள் விடாமல் துரத்தி சென்று சஞ்சயை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த சஞ்சய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.