Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |