Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழகத்தில் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடும் மழை காரணமாக கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |