Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த 10 நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன மழையால் நீர் சூழ்ந்துள்ளதாலும், நிவாரண முகாம்களாக செயல்படும் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |