தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில் மயிலாடுதுறை திருவிலந்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. பாளையங்கோட்டை மதிதா இந்து மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதாகியுள்ளது. கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை