Categories
மாவட்ட செய்திகள்

பல் துலக்கிய போது ஏற்பட்ட பயங்கரம்…. வாயை கிழித்த பிரஸ்… அதிர்ச்சி…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று, காலை வழக்கம்போல் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடேன அவர் பல் தேய்த்துக் கொண்டிருந்த பிரஸ் ஆனது, ரேவதியின் ஒருபக்க கண்ணத்தை கிழித்து மறுபக்கம் சென்றுள்ளது. இதனால் அவரது வாய் பகுதியில், பல் தேய்க்கும் பிரஸ் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே இதனை கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் அவரின் இந்த நிலைமையை மருத்துவர்கள் கண்டு, அறுவை சிகிச்சை செய்து பிரஸ்சை அகற்றுவதாக முடிவெடுத்தனர்.

இந்நிலையில் ரேவதிக்கு நேற்று அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டு, ரேவதியின் வாயிலிருந்து பிரஸ்சை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.இதனை அடுத்து அவர் குணமடைந்த நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப் பட்டுள்ளார். இச்சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பெரும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Categories

Tech |