தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவொற்றியூரில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. திமுக வேட்பாளர் 32,952. அதிமுக வேட்பாளர் 20,638 வாக்குகள், சீமான் 16,638 வாக்குகள் பெற்றுள்ளார். அண்ணாநகரில் திமுக வேட்பாளர் மோகன் 30,439, அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா 23,972, மக்கள் நீதி மையம் வேட்பாளர் பொன் ராஜ் 6,994, விருகம்பாக்கத்தில் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜ் 27,537, அதிமுக வேட்பாளர் 22,192, மக்கள் நீதி மையம் வேட்பாளர் சினேகன் ,7,091 வாக்குகள் பெற்றுள்ளார்.