Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினரின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டமானது கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் கம்பெனியில் டியூட்டி  பார்த்திட வேண்டும் என்ற   ஆணையைத் திரும்பப் பெறவும், காலியிடங்கள் நிரப்புதல் நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்  பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு காலியிடங்கள் ஏற்கனவே அறிவிப்பு ஆகிவிட்டது என மறுக்கப்பட்ட விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதனையடுத்து சீனியர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வெயிட்டேஜ் 12,24,36 உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கோட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் அது அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்க ஊழியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |