பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கே. ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகனின் குடும்பத்தினர் பலாப் பழம் சாப்பிட்டுவிட்டு தயிர் சாதத்தை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் ,அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும் வாந்தி எடுத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.