Categories
சினிமா

“பலமுறை பேசியும் பயனில்லை….!”விவாகரத்து முடிவில் பிடிவாதமாக இருந்த தனுஷ்”….!!!!

தனுஷிடம் விவாகரத்து செய்ய வேண்டாம் என ரஜினிகாந்த் பலமுறை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி அவர்கள் விவாகரத்தில் என்ற பேச்சு ஆரம்பித்தவுடனே பலமுறை இருவரிடமும் சமரசம் பேசியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தனுஷிடம் எவ்வளவோ கூறியும் அவர் விவாகரத்து என்ற முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் இந்த விவாகரத்து முடிவுக்கு ஏற்கனவே ஒரு விவாகரத்தான நடிகையுடனான தொடர்பு தான் காரணம் என கூறப்படுகிறது. மேலும் ரஜினி வைத்து படம் தயாரித்ததால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை போன்றவை தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமாக பேசப்படுகின்றன. இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |