Categories
தேசிய செய்திகள்

பரிதாபம்..! அடுத்தடுத்து “78 பசுக்கள் உயிரிழப்பு” – அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்திலுள்ள சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமம் உள்ளது. இங்கு அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று  அமைந்துள்ளது.  இந்த கால்நடை   பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இதனை தனியார் அமைப்பு (நிறுவனம்) பராமரித்து வருகிறது.

இந்நிலையில் பண்ணையில்  நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டநிலையில் உள்ளன… ஒரே நாளில் 78 பசுக்கள்  உயிரிழந்ததற்கான காரணம் குறித்து மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்ட தீவனத்தின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆய்வின் தகவல்படி பசுக்கள் உண்ட உணவு விஷமாக மாறியதால் இந்த பரிதாபம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |