சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் அவரை பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது சிறுமிக்கு 18 வயதை பூர்த்தி அடையாததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.