வீட்டுக்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி அலுவலர் தாஹிர் அலி, வனவர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் நுழைந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.