மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கருமொழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளிள் பற்றி தீயை பொதுமக்கள் அனைத்துள்ளனர். இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் ஸ்ரீபிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.