Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கேட்சை விட்டதும்…. “ஆக்ரோஷமாக கத்திய ஹிட்மேன்”….. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டதால் ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

2022 ஆசிய கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 லீக் போட்டியில், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தியா இறுதி வரை கடும் போட்டியை அளித்த போதிலும், கடைசியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. களத்தில் சில வாய்ப்புகளை அவர்கள் தவறவிடாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கலாம்.

ஆம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. மற்ற இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டைப் போலவே, இதுவும் ஒரு எட்ஜ் ஆஃப் யுவர் சீட் த்ரில்லர் மேட்ச் தான்.. இதில் இந்தியா துரதிர்ஷ்டவசமாக  டாஸை வெல்லவில்லை.. பாகிஸ்தான்  அணியின் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்றார், அவர் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இந்தியா மொத்தம் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. விராட்டைத் தவிர, தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரது துணை கேஎல் ராகுல் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர். மிடில் ஆர்டரில் சொதப்பியதால் இந்திய அணிக்கு 15-20 ரன்கள் குறைவு என்பதே உண்மை.

இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது.. துபாயில் 182 ரன்கள் இலக்கு பாகிஸ்தானுக்கு ஒருபோதும் எளிதானதாக இருக்கப் போவதில்லை, அதுவும் இந்தியாவுக்கு எதிராக, ரவி பிஷ்னோய் வீசிய 4ஆவது ஓவரில் கேப்டன் பாபர் ஆசாம் டக்அவுட் ஆகி வெளியேறிய போது அது மிகவும்பாகிஸ்தானுக்கு சிக்கலானது. கிரிக்கெட்  விளையாட்டின் 2 வெள்ளை பந்து வடிவங்களிலும் உலகின் நம்பர் ஒன் பேட்டராக இருக்கும் பாபர், இதுவரை ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆட தவறிவிட்டார். அவர் ஒரு குரூப் ஏ போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10 ரன்கள் எடுத்தார், பின்னர் ஹாங்காங்கிற்கு எதிராக 9 ரன்கள் எடுத்தார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) அவரால் 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பின் பேட்டிங் செய்ய வெளியேறிய ஃபகார் ஜமானும் 15 ரன்கள் எடுத்த நிலையில், விரைவில் பெவிலியன் திரும்பினார். ஆனால் முகமது ரிஸ்வான் ஒரு முனையில் நின்று அஸ்திவாரம் போட்டு நின்றார். அவருக்கு முகமது நவாஸ் கைகொடுத்தார்..  இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து பாபர் அசாம் & கோ இலக்கை நெருங்கினார்கள். ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் அவர்கள் வெளியேறியது ஆட்டத்தில் மற்றொரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. மேலும் இந்தியா மீண்டும் போட்டிக்குள் வந்தது..

 

ஆனால் இன்னிங்ஸின் 18 வது ஓவரில், ஷார்ட் தேர்ட் மேனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஒரு கேட்சை விட்டார்.. அது ஒரு முக்கியமான திருப்புமுனையாக மாறியது. ஆம், ஆசிஃப் அலி 0 வில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வந்த எளிய கேட்சை அர்ஷ்தீப் சிங் பிடிக்க முயன்றார்.. ஆனால் அது எப்படியோ தவறிவிட்டது. இந்திய கேப்டன் ரோஹித், கேட்ச் டிராப்பில் மகிழ்ச்சியடையவில்லை, மேலும் அர்ஷ்தீப் புன்னகையுடன் பதிலளித்ததால் கோபமாக கத்தி எதிர்வினையாற்றினார். ரோஹித் முகம் ஆக்ரோஷமானது.. ரோஹித் சர்மா ஆக்ரோஷப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதன்பின் ஆசிஃப் அலி மேலும் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் அவரை விக்கெட் எடுத்தார், ஆனால் அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தியாவும் தோற்று விட்டது.. இந்த கேட்சை தவறவிட்டதால் தான் இந்திய அணி தோற்றது என சமூகவலைத்தளங்களில் அர்ஷ்தீப் சிங்கை கடுமையான சொற்களால் இந்திய ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.. அவர் அந்த ஒரு கேட்சை விட்டிருந்தாலுமே 3.5 ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து ஓரளவு சிறப்பாகவே பந்துவீசி  இருக்கிறார்..

அவர் மட்டுமே அந்த கேட்சை பிடிக்காதது மட்டுமே தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது. இது போன்ற முக்கியமான தொடரில் 100 – 200 போட்டியில் விளையாடிய அனுபவமுள்ள வீரர்களே சில சமயங்களில் கேட்சை கோட்டை விடும் நிலையில், இவர் புதிதாக 10 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். எனவே வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என தெரிந்தும் இந்த வீரரை மோசமாக விமர்சிப்பது தவறு என்று நிறைய இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |