பயோ- பபுள் வளையத்தை மீறிய இங்கிலாந்து நடுவருக்கு 6 நாட்கள் தனிமையில் இருக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆக மைக்கேல் ஹாக் நடுவராக பணிபுரிந்து வருகிறார். அதோடு சர்வதேச கிரிக்கெட் தொடரில் சிறந்த நடுவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார் .
இந்நிலையில் 41 வயதான மைக்கேல் ஹாக் பயோ- பபுள் விதிமுறையை மீறி அனுமதி இல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனால் அவர் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து பணியாற்ற அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .அதோடு 6 நாட்கள் அவர் தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.