Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. பறிமுதல் செய்த போலீஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

கஞ்சா செடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையில் முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல் துறையினர் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் 10-கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது. அந்த கஞ்சா செடிகளை காவல்துறையினர் வேருடன் பிடுங்கி எடுத்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் 4 வெளிமாநில தொழிலாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |