Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்”…. வழங்கிய ஆட்சியர்…!!!!!

ஆலங்குடியில் பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டதை தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார்.

இதை அடுத்து ஆட்சியர் பேசியதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராமம் ஊராட்சிகளிலும் வலங்கைமான் வட்டாரத்தில் 50 கிராம ஊராட்சிகளிலும் நீடாமங்கலம் வட்டாரத்தில் 44 கிராமம் ஊராட்சிகளிலும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 29 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 174 கிராம ஊராட்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், ஆதிதிராவிட பழங்குடியினர் மற்றும் ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது என பேசியுள்ளார். இதன் பின்னர் சிறு,குறு தொழில் தொடங்குவதற்கான அங்கீகார சான்றிதழ் என மொத்தம் 5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Categories

Tech |