Categories
மாநில செய்திகள்

“பயணிகளுக்காக 10” மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 83 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 1.11 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 1.41 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.50 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழக தோடு சேர்ந்து 6 வழித்தடங்கலில் 12 மினி பஸ்களை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதனை வம்பிரிவுபடுத்தும் விதமாக அரசினர் தோட்டம் மெட்ரோ – தலைமைச் செயலகம், கிண்டி மெட்ரோ – வேளச்சேரி விஜயநகர் பஸ் நிறுத்தம், சின்னமலை மெட்ரோ – தரமணி, செனாய் நகர் மெட்ரோ- தியாகராய நகர், விமான நிலையம் மெட்ரோ- தாம்பரம் மேற்கு ஆகிய ஐந்து வழித்தடங்களில் 2 பஸ்கள் வீதம் 10 மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |