Categories
உலக செய்திகள்

பயணம் செய்த நபரின்…. புடைத்திருந்த கால்சட்டை…. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பயணி ஒருவர் கால்சட்டையில் அதிகமான பணத்தை வைத்து பயணித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் ஜெனிவாவில் இருந்து வெனிஸுக்கு பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது கால்சட்டையில் உள்ள பை வழக்கத்திற்கும் மாறாக அதிகமாகப் புடைத்து இருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனால் Domodossola ரயில் நிலையத்தில் அவரை கீழே இறங்கச் சொல்லி சோதனையிட்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பயணம் செய்த அந்த நபர் தன்னுடைய கால்சட்டைப் பைக்குள் 91,000 யூரோக்களை கரன்சி நோட்டுகளாக மாற்றி வைத்திருந்துள்ளார்.

மேலும்  அத்துடன் பணத்தை மறைத்து வைப்பதற்காக கால்சட்டையில்  ரகசியமாக ஒரு பையை வைத்து தைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பயணி ஒருவர் தன் கையில் 10,000 யூரோவிற்கும் அதிகமாக பணம் கொண்டு சென்றால் அந்தப் பணம் எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான விளக்கம் கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் இந்த நபர் 91,000 யூரோக்களை மட்டும் மறைத்துக்கொண்டு சென்றுள்ளார். எனவே அவர் அந்தப் பணத்தில் பாதி தொகையை அபராதமாக கட்ட வேண்டும். இருப்பினும் இந்த பணம் அவருக்கு எப்படி வந்தது என்பதை அவர் கண்டிப்பாக காவல்துறையினருக்கு நிரூபித்தாக வேண்டும்.

Categories

Tech |