Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து….. கொத்தனாருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகன விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்கணங்கோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் முளகுமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு குமார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |