Categories
உலக செய்திகள்

பயங்கரவாதியின் திடீர் தாக்குதல்… பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நைஜர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதி ஒருவர் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசுப்படையினர் மற்றும் பொதுமக்கள் மீது இந்த பயங்கரவாத அமைப்புகள் தீடீர் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகளில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நைஜர் நாட்டில் உள்ள தைய்ம் என்ற கிராமத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |