வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் கலவை கூட்டு ரோட்டிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுனரான அருண் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.