மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம். சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.