Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் ராமசாமி நகர் 1-வது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செண்டை மேளம் வாசிக்கும் கலைஞர் ஆவார். இந்நிலையில் சங்கர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவொற்றியூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் காசிமேடு சூரிய நாராயண சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற 2 பேர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மன்னார் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஏழுமலை என்பவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |