மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன் பட்டு கிழக்குத் தெருவில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான லோகநாதன்(24) என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் அன்னவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.