பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நொச்சிஓடைப்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக சென்ற பொக்லைன் எந்திரம் மேரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொக்லைன் எந்திர ஆப்பரேட்டரான வாகித்அலி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.