தொழிலாளி மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் செய்யலூரில் அழகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் திருஉத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக கமுதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென அழகர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அழகரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அரசு பேருந்து டிரைவரான வேல்பாண்டியன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.