ரவீந்திர் போட்ட பதிவால் அவரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள்.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் அண்மையில் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் புறப்பட்டார்கள். மேலும் மனைவியுடன் கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்தார் ரவீந்தர். மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து ஹனிமூன் கொண்டாட போகிறான் என போட்டு செஞ்சிடாதீங்க. நாங்கள் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு தான் செல்கின்றோம் என பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இணையதளம் வாசிகள் நாங்கள் கேட்டோமா? நீங்களே ஏன் இப்படி கண்டன்ட் கொடுத்து மாட்டேங்கறீங்க? கூறி வருகின்றார்கள்.. மேலும் இவர் பப்ளிசிட்டிக்காக தான் இப்படி செய்கின்றார் உங்களுக்கு விளம்பரம் பைத்தியம் பிடித்து விட்டதா? என விளாசி வருகின்றார்கள்.