Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை”…. பொதுமக்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மழவன் சேரம்பாடியில் இருந்து காவாயில் செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பையொட்டி காட்டு யானை ஒன்று நடந்தது.அப்போது சாலையில் சென்ற பொதுமக்களை துரத்தியது. இதனால் மக்கள் அச்சமடைந்தார்கள்.

நேற்று அய்யன்கொல்லி- கொளப்பள்ளி இடையேயான சாலையில் அமைந்திருக்கும் கோட்டப்பாடி விநாயகர் கோவில் அருகே காட்டி யானை ஒன்று புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. மேலும் சாலையை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் யானை அங்கேயே நின்றதால் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினார்கள்.

Categories

Tech |