பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் விநாயகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
மலையாள சினிமாவுலகில் குணச்சித்திர வேடங்களில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் இவர் கொச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் மீது முன்னாள் மாடல் அழகி ஒருவர் மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது இதைப்பற்றி கேரளாவில் பலரும் பேசி வருகின்றார்கள். அது என்னவென்று எனக்கு தெரியாது.
ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்வது தான் மீடூவா…? ஒரு பெண்ணை பார்க்கும்போது எனக்கு பிடித்திருந்தால் அவரிடம் நேரடியாகச் சென்று என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பமா என்று கேட்டு விடுவேன். அவள் விருப்பம் என்று கூறினால் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்வேன். இதுபோல நான் இதுவரையில் பத்து பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கின்றேன். இவரின் இந்த பேச்சுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது. இவர் ஏற்கனவே ஆபாசமாக பெண்களைப் பற்றி பேசியதற்காக 2019 ஆம் வருடம் போலீசார் இவரை கைது செய்தனர். பின் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.