Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஆவேசம்….!!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான  வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பான விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷை பள்ளி நிர்வாகத்தினர் தாக்கினர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது மக்கள்  பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது என்று அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சன்  கூறினார். மேலும் உள்நாட்டு போர், கொரோனா வைரஸ் தொற்று என பல இக்கட்டான சூழலில் பத்திரிக்கையாளர்கள் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் பணியை மேற்கொண்டனர். ஆனால் நாளுக்கு நாள் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில் பள்ளி மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகிய இருவரின் மீது ரவுடி கும்பலை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதாவது பிரகாஷ்ராஜ் மற்றும்  அஜித்குமார்  சென்ற காரை பின் தொடர்ந்து வந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளனர். மேலும் உண்மை சுடும் என்பது பெரியோர்களின் வாக்கு. இதற்குக் காரணம்  தொடர்ந்து எழுதி வந்த உண்மையால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இப்படி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகம் அதற்கு பதிலாக மாணவர்களையும், பொது மக்களையும், பத்திரிகையாளர்களையும், மிரட்டி வருகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோரை தாக்கிய கும்பலை காவல்துறையினர் கைது செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.

மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தை நீதிபதியின் முன்பு நிறுத்துவதற்கு நமது தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் தங்களது பணிகளை எந்த அச்சமும், இடையூறும் இல்லாமல்  மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |