Categories
தேனி மாவட்ட செய்திகள்

பதவி உயர்வு வழங்க வேண்டும்… கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்… சுகாதார ஆய்வாளர் சங்கம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பங்களாமேட்டில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பணிகளில் ஓய்வில்லாமல் பணிபுரியும் 1,002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை உறுதி செய்யவேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் இரண்டாவது நிலை பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் கார்த்திக், மாவட்ட தலைவர் தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |