உதவி காவல் அதிகாரி பதவி உயர்வுக்காக முகேஷ் அம்பானி வீட்டின் அருகே குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டார்.
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே கடந்த 25-ஆம் தேதி மர்ம கார் ஒன்று ரெடி பொருளுடன் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் சிறிது நாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
யார் அந்த இடத்தில் காரை நிறுத்தி அதில் வெடிபொருளை வைத்தது என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில் அதிரடி திருப்புமுனையாக உதவி காவல் அதிகாரி சச்சின் வாசே என்பவர் பதவி உயர்வுக்காக வெடிபொருள் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.