சூடானில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொது மக்களின் மீது ராணுவத்தினர்கள் சரியாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
சூடான் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு பொது மக்கள் வீதியிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் அந்நாட்டின் பொதுமக்கள் தலைநகர் கார்த்தோம் உட்பட பல முக்கிய பகுதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்களின் மீது ராணுவத்தினர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டையும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த அதிபயங்கர தாக்குதலில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்கள் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.