கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆ. சண்முகசுந்தரம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கனமழையின் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை ரூபாய் 60 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது கூட்டுறவுத்துறையால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் நடத்தப்படுகிறது. இந்த கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடைகளுக்கு திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை காஞ்சி மக்கள் அங்காடி, சிந்தாமணி, நாம்கோ, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் போன்றவைகள் நடத்துகிறது. இந்த கடைகளில் 40 முதல் 42 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பண்ணை பசுமை கடைகளில் பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.