Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணியில் இருந்த போது… போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நெஞ்சுவலி ஏற்பட்டு பணியில் இருந்த காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரன் பணியில் இருந்தபோது பேருந்தில் குடித்துவிட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்திரனும் அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதனை பார்த்த மற்ற காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |