பணிபுரியும் இடத்தில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இழுப்பூரில் இருக்கும் புதூர் பகுதியில் செல்வராஜ் வயது (35) என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருவப்பூரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எந்திரத்தில் இருந்து மின்சாரம் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் உடலில் பாய்ந்தது.
இதனால் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் உயிரிழந்த செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிரமாக திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.