Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட சட்ட கல்லூரி மாணவி” தாய் கூறிய பதில்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

சட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(21) என்ற மகள் இருந்துள்ளார். விழுப்புரத்தில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா தனது தாய் உமாரான இடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டபோது தன்னிடம் இப்போது பணம் இல்லாததால் வேறு யாரிடமாவது விரைவில் வாங்கி தருகிறேன் என கூறியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா விஷம் குடித்து விட்டு தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உமாராணி தனது மகளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தியா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |