Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கேட்டு தகராறு…. மனைவியை வெட்டிய கணவர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் வேல்முருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(47) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த வேல்முருகன் கடந்த 2016-ஆம் ஆண்டு சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் வேல்முருகனுக்கு 2000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

Categories

Tech |