Categories
தேசிய செய்திகள்

பணமோசடி வழக்கு… மெகபூபா முப்தி ஆஜர்..!!

பண மோசடி புகாரில் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆஜரானார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜரானார். இவர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ளார். அப்போது அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தது. இதை அமலாக்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அமலாக்கத் துறை இயக்குனரகத்தில் ஆஜராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.  இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை இயக்குனரகத்தில் ஆஜரானார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை கண்டித்து குரல் எழுப்பிய நிலையில், மத்திய அரசு இவரை ஓராண்டுகாலம் வீட்டு சிறை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |