Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பணப்பையுடன் நடந்து சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் இவருடைய மனைவி மகேஸ்வரி நேற்று காலை அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூபாய் 64 ஆயிரத்து எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் மகேஸ்வரியின் கையில் இருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பணப்பையுடன் தப்பிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |