வேடந்தூர் அருகே பட்டாசு வெடித்து விவசாயின் கட்டைவிரல் துண்டானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் ரோசாப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சௌந்தரராஜன் நேற்று மதியம் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது அவர் கையில் பிடித்து பட்டாசை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென வெடித்து சிதறியது.
இதனால் அவரின் இடது கையின் கட்டை விரல் துண்டானது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.