தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடகூர் மேல தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 15 வயதுடைய ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதால் தங்கம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்காமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ரம்யாவை அவரது தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.