Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. அச்சத்தில் பெற்றோர்கள்….. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள  தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து  பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூடுதல் பேருந்து வசதிகளை மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இயக்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |