ஜம்முவில் சந்தேகிக்கப்படும் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகின்றார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், ஜம்முவில் பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் திறந்தவெளி விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுபற்றிய தகவலை கிராமவாசிகள் சிலர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதற்கிடையில், சம்பாவில் உள்ள பள்ளி கிராமத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் இடத்தில் பாதுகாப்பு சோதனைகளை நடந்தி வருகின்றன. மேலும் சந்தேகிக்கப்படும் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.