பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதைப்போல் நேற்று பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பல வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.