Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பச்சை நிறத்தில் குடிநீர்…. அதிர்ச்சியடைந்த மக்கள்…. நோய் பரவும் அபாயம்….!!

பச்சை நிறத்தில் குடிநீர் விநியோகிக்கபடுவதால் நோய் பரவும் அபாயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் வீரியம்பட்டி கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அங்கு இருக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் வரும் குடிநீர் பச்சை நிறமாகவும் துர்நாற்றத்துடனும் காணப்பட்டது. இதுகுறித்து அவர்கள் மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி அதை பார்த்தனர், அப்போது அந்த குடிநீர் பச்சை நிறமாகவும் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி இடிந்து விழுந்த நிலையிலும், பாசியும் படிந்து காணப்பட்டது.

குடிநீர் தேக்க தொட்டி திறந்த வெளியாக இருப்பதால் பறவைகளின் எச்சமும் காணப்பட்டன. இந்த குடிநீரை அந்தப் பகுதி மக்கள் குடிப்பதால் அவர்களுக்கு பல உடல் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. இந்தக் குடிநீர் தேக்க தொட்டி 30 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகின்றது. இதனால் பழைய தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக குடிநீர் தேக்க தொட்டியை கட்டித் தருமாறு அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |